Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்து படிக்கட்டில் நின்றால் வழக்கு! – மாணவர்களுக்கு எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (15:01 IST)
சென்னையில் மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணிக்க அரசு பேருந்துகளில் இலவச பயணசீட்டை தமிழக அரசு அளித்து வருகிறது. இந்நிலையில் பேருந்துகளில் படிகளில் தொங்கியபடி மாணவர்கள் பயணிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் இதுபோன்ற ஆபத்தான சாகசங்களில் ஈடுபட கூடாது என காவல்துறை எச்சரித்தாலும் இப்படியான பயணங்கள் தொடர்கின்றன.

சென்னையில் நேற்று மட்டும் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்ததாக 111 பள்ளி மாணவர்கள், 43 கல்லூரி மாணவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதுகுறித்து எச்சரித்துள்ள சென்னை காவல்துறை, சென்னையில் பேருந்து படிக்கட்டுகளில் நின்றபடி பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது இனி வரும் காலங்களில் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டகேங்ஸ்டர் ரவுடி.. அதிர்ச்சியில் சிறை அதிகாரிகள்..!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டுக்கு கனமழையா?

அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சோதனை எதிரொலி: தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. புதினிடமும் பெருமை பேசிய டிரம்ப்..!

பிரசவ வலியால் துடித்த பெண்.. ஆட்டோவில் வைத்து பிரசவம் பார்த்த பெண் காவலர்.. குவியும் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments