Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிடுவோம்: தி.வேல்முருகன் எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2015 (23:17 IST)
தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மீது பொய் வழக்கு போடப்படுவதை கண்டித்து சென்னையில், டிஜிபி அலுவலகத்தை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என தி.வேல்முருகன் அறிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, கடலூரில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
கடலுார் மாவட்டத்தில், குமளங்குளத்தைச் சேர்ந்த, பாமக பிரமுகர் ராஜாவை, எங்கள் கட்சியைச் சேர்ந்தவர் கொலை செய்ததாக, பாகவினர் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். குடும்ப பிரச்னை காரணமாகவே, ராஜா தற்கொலை செய்து கொண்டார். ஆனால், இந்த கொலை வழக்கில் எங்கள் கட்சி நிர்வாகி மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
இதனை கண்டிக்கும் விதமாக, வரும் 15ஆம் தேதி, சென்னையில் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம் என்றார். 
 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments