Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிடுவோம்: தி.வேல்முருகன் எச்சரிக்கை

டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிடுவோம்: தி.வேல்முருகன் எச்சரிக்கை
, செவ்வாய், 6 அக்டோபர் 2015 (23:17 IST)
தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மீது பொய் வழக்கு போடப்படுவதை கண்டித்து சென்னையில், டிஜிபி அலுவலகத்தை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என தி.வேல்முருகன் அறிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, கடலூரில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
கடலுார் மாவட்டத்தில், குமளங்குளத்தைச் சேர்ந்த, பாமக பிரமுகர் ராஜாவை, எங்கள் கட்சியைச் சேர்ந்தவர் கொலை செய்ததாக, பாகவினர் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். குடும்ப பிரச்னை காரணமாகவே, ராஜா தற்கொலை செய்து கொண்டார். ஆனால், இந்த கொலை வழக்கில் எங்கள் கட்சி நிர்வாகி மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
இதனை கண்டிக்கும் விதமாக, வரும் 15ஆம் தேதி, சென்னையில் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம் என்றார். 
 

Share this Story:

Follow Webdunia tamil