Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக ஆளுநரை சந்திக்க மாநகர காவல் ஆணையர் விரைவு.. குண்டுவீச்சு சம்பவம் குறித்து ஆலோசனை..!

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (11:12 IST)
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் ஆளுநர் மாளிகைக்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நேற்று ஆளுனர் மாளிகையிலி நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க வருகை என தகவல் வெளியாகியுள்ளது.
 
ஆளுநர் மாளிகை முன்பு நேற்று கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கருக்கா வினோத்தை கைது செய்த போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
 
பெட்ரோல் வீச்சு சம்பவத்தை தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக உண்மையிலேயே தமிழ் விரோத கட்சி: அமித்ஷாவின் ஆவேச பேட்டி..!

நேற்று 11 மாவட்டங்களில் சதமடித்த வெயில்.. இன்றும் வெப்பம் அதிகம் இருக்கும் என தகவல்..!

மகிழ்ச்சி நிலைக்கட்டும்: தெலுங்கு, கன்னட சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்து சொன்ன விஜய்..

பாஜகவுடன் கூட்டணி வைத்து கொள்ள ஒரு நிபந்தனை மட்டும் விதியுங்கள்.. ஈபிஎஸ்-க்கு தங்கம் தென்னரசு அறிவுரை

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் ஈபிஎஸ் கதை முடிந்துவிடும்: திருமாவளவன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments