Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பறிமுதல் செய்த கஞ்சாவை சைடில் விற்ற போலீஸ்! – சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (15:29 IST)
சென்னையில் பறிமுதல் செய்த கஞ்சாவை ரகசியமாக விற்க முயன்ற இரண்டு காவலர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கஞ்சா மற்றும் பான் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றை விற்பவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னை அயனாவரம் பகுதியில் 1 கிலோ கஞ்சாவோடு நின்று கொண்டிருந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அவரை விசாரித்ததில் அவர் பெயர் திலீப் என்றும், அயனாவரம் பனந்தோப்பு காலணியில் வசித்து வரும் அவரது நண்பர்களும், காவலர்களுமான சக்திவேல் மற்றும் செல்வகுமார் ஒரு வழக்கில் பிடிபட்ட 1 கிலோ கஞ்சாவை விற்று தருமாறு திலீப்பிடம் கொடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து திலிப் குமார் மற்றும் இரண்டு காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments