Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குருபூஜை பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரிடம் சீண்டல்! – இருவர் கைது!

Webdunia
ஞாயிறு, 31 அக்டோபர் 2021 (08:42 IST)
சென்னையில் குருபூஜை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை கிண்டல் செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முத்துராமலிங்க தேவர் குருபூஜையையொட்டி தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் முத்துராமலிங்க தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிலையில் முத்துராமலிங்க தேவர் சிலைகள் உள்ள இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில் சென்னை நந்தனத்தில் குருபூஜை பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவரிடம் அங்கு வந்த இருவர் கிண்டல் செய்து சீண்டலில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்துள்ள காவல்துறை அந்த இருவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments