Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கை சென்னை மக்கள் மதிக்கவில்லை: ஐ.ஐ.டி குழு நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 8 மே 2020 (18:39 IST)
ஊரடங்கை சென்னை மக்கள் மதிக்கவில்லை
ஊரடங்கு உத்தரவை சென்னை மக்கள் மதிக்கவில்லை என்றும் அதனால்தான் சென்னையில் கொரோனா நோய் தொற்று அதிகம் பரவி இருப்பதாகவும் ஐஐடி குழு நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது
 
சென்னையில் கொரோனா அதிகம் பரவியது ஏன் என்பது குறித்து சமீபத்தில் ஐஐடி நடத்திய ஆய்வின் அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் ‘ஸ்மார்ட் போனில் வைத்திருப்பவர்கள் எங்கெல்லாம் சென்று உள்ளார்கள் என்ற வரைபட ஆய்வு தரவுகளை உருவாக்கி அதன் மூலம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் விழுப்புரம், சென்னை, சிவகங்கை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு காலத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
குறிப்பாக வார இறுதி நாட்களிலும் மூன்றாவது கட்ட ஊரடங்கு நேரத்திலும் சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. வட சென்னை, மத்திய சென்னை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததாகவும் ஊரடங்கை அவர்கள் பொருட்படுத்தவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
 
ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் இருந்ததை விட மே மாதம் 17 சதவீதம் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பித்து உள்ளதை அடுத்து தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கை என்ன எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments