Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் விழுந்து விபத்து.. இடிபாடுகளில் சிக்கியவர் எத்தனை பேர்?

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2023 (13:11 IST)
சென்னை பாரி முனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானதை அடுத்து அந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 
 
சென்னை பாரிமுனையில் அரண்மனைக்காரன் தெருவில் உள்ள பழமையான கட்டடத்தை சீரமைக்கும் பணி நடந்து வந்தது. இந்த நிலையில் அந்த கட்டிடம் திடீரென இன்று இடிந்து விழுந்ததை அடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்ப பணிகளை கவனித்து வருகின்றனர். கட்டிட இடிப்பாடுகளுக்கு இடையில் நான்கு பேர் சிக்கி உள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
சென்னையின் பிசியான பகுதியான பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments