சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத்: தேதி அறிவிப்பு

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (12:43 IST)
சென்னை மற்றும் நெல்லை இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த ரயில் இயக்கப்படும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
 
ஏற்கனவே சென்னை - கோவை மற்றும் சென்னை - மைசூர் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவல் படி சென்னை - நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயில் செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் நெல்லை ரயில் நிலையத்தில் தென்னக கோட்ட ரயில்வே மேலாளர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments