Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை அதிகாலை 3.40 மணி முதல் சிறப்பு மெட்ரோ ரயில் சேவை.. சென்னை மெட்ரோ அறிவிப்பு!

Webdunia
சனி, 5 ஆகஸ்ட் 2023 (17:52 IST)
நாளை அதிகாலை 3.40 மணி முதல் சிறப்பு மெட்ரோ சேவை இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது 
 
சாதாரணமாக சென்னையில் மெட்ரோ ரயில் நான்கு மணிக்கு தனது சேவையை ஆரம்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நாளை சென்னையில் கலைஞர் நினைவு மாரத்தான் நடைபெற உள்ளது. 
 
இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இதில் பங்கேற்பவர்களின் வசதிக்காக அதிகாலை 3 40 மணி முதல் சென்னை சிறப்பு மெட்ரோ சேவை இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
நாளை 3.40 மணிக்கு இயக்கப்படும் மெட்ரோ ரயில் சைதாப்பேட்டை, லிட்டில் மவுண்ட், கிண்டி, விமான நிலையம், விம்கோ நகர்  சென்ட்ரல் ஆகிய பகுதிகளில் இருந்து இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
கலைஞர் மாரத்தான் போட்டியில் பங்கேற்பவர்கள் இந்த மெட்ரோ ரயிலில் பயணித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அயோத்தி ராமருக்கு உயிர் ஊட்டிய தலைமை அர்ச்சகர் மரணம்.. கருவறையில் காட்டிய அறிகுறி

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments