சென்னையில் மெட்ரோ ரயில்களின் நேரம் இன்று முதல் மாற்றம்!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (07:16 IST)
சென்னை சென்னை மெட்ரோ ரயில்கள் இதுவரை காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கிக் கொண்டிருந்த நிலையில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிலையம் அறிவித்துள்ளது
 
சென்னையில் பயணம் செய்வதற்கு ஏதுவாக சென்னை மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது என்பதும் பெரும்பாலான பயணிகள் இந்த மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வதால் நல்ல லாபத்துடன் மெட்ரோ இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சாலை வழியே பயணம் செய்வதை விட மெட்ரோ ரயிலில் செல்வதால் நேரமும் குறைவு மற்றும் கட்டணமும் குறைவு என்பதால் பல பயணிகள் தற்போது மெட்ரோ ரயிலை  பயன்படுத்தி வருகின்றனர்
 
இந்த நிலையில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து சென்னை மெட்ரோ ரயில் இனி 5:30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள் இந்த நேரத்திற்குள் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments