செலவு 22,000 கோடி; வரவு வெறும் 200 கோடி! – நஷ்டத்தில் சென்னை மெட்ரோ?

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (15:13 IST)
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ஆன செலவிற்கு நிகரான வருமானம் கிடைக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள் கடந்த திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டு அதிமுக ஆட்சி காலத்தில் முடிவடைந்தது. சென்னையின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் இந்த மெட்ரோ ரயில் சேவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்பட்டது.

இந்த மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ரூ.22 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மெட்ரோ ரயில்கள் சேவை தொடங்கி இதுநாள் வரை மொத்த வருவாய் ரூ.200 கோடி மட்டுமே கிடைத்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சாதாரண மின்சார ரயில், அரசு பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட மெட்ரோ ரயில்களின் கட்டணம் அதிகமாக இருப்பதே பயணிகள் அதிகம் ஈர்க்கப்படாததற்கு காரணம் என பேசிக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆலோசகர் குழுவை நியமனம் செய்ய மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments