Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி.. 7 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் என அறிவிப்பு..!

Siva
ஞாயிறு, 3 மார்ச் 2024 (07:59 IST)
பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சென்னையில் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து மெட்ரோ ரயில்கள் இன்று ஏழு நிமிடங்களுக்கு ஒரு ரயில் என்ற வகையில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை தாம்பரம் - கோடம்பாக்கம் இடையே உள்ள ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறும் காரணத்தினால் இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. எனவே பயணிகள் வசதியை முன்னிட்டு இன்று கூடுதலாக மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

விம்கோ நகர் முதல் சென்ட்ரல் வரை 9 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் இன்று 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

12 மணி முதல் 8 மணி வரை என்று 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கூடுதலாக மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என காலை 5 மணி முதல் 10 மணி வரையும், 15 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் இயக்கப்பட்டு வரும் நிலையில் மின்சார ரயில் ரத்து காரணமாக இன்று கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments