Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் 4 நாட்களுக்கு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. முழு விவரங்கள்..!

Mahendran
திங்கள், 13 ஜனவரி 2025 (17:07 IST)
சென்னை மெட்ரோ ரயில் சேவை ஜனவரி 14-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை மாற்றப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 14 முதல் 16-ஆம் தேதி வரை ஞாயிறு விடுமுறை நேர அட்டவணையின் படி மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும், ஜனவரி 17-ஆம் தேதி சனிக்கிழமை அட்டவணையின் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஞாயிறு விடுமுறை நேர அட்டவணை பிரகாரம் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். ஜனவரி 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் சனிக்கிழமை அட்டவணையின் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

அதன்படி, ஞாயிறு விடுமுறை அட்டவணை என்பது காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments