Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Mahendran
சனி, 18 மே 2024 (08:23 IST)
கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கமே தெரியாத அளவில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள் என்பதும் நீர் நிலைகளிலும் தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருப்பதால் இந்த ஆண்டு தண்ணீர் கஷ்டமும் இருக்காது என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் நேற்று மாலை 27 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இன்று காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
தமிழகத்தில் உள்ள கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த ஆண்டு கோடையின் தாக்கமே தெரியாத அளவுக்கு டிசம்பர் மாதம் போல் பல இடங்களில் மழை பெய்து வருவதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

திடீரென சாலையின் நடுவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. வாகனங்கள் சேதம்..!

அன்புமணியை சந்திக்க மாட்டேன்: சென்னை வந்த டாக்டர் ராமதாஸ் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments