Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Siva
வியாழன், 9 மே 2024 (09:18 IST)
தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வரும் நிலையில் ஆங்காங்கே கோடை மழை பெய்து மக்களை மகிழ்வித்து வருகிறது என்பதும் நேற்று கூட சென்னையில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது என்பதையும் பார்க்கவும்.

ஒரு பக்கம் 100° பாரன்ஹீட்டிற்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வரும் நிலையில் இன்னொரு பக்கம் கோடை மழை பெய்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்றும் தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய ஏழு மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments