Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

Siva
திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (07:31 IST)
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கடந்த சில நாட்களாக பகலில் வெயில் கொளுத்தி வந்தாலும் மாலை மற்றும் இரவில் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்த நிலையில் இன்று 17 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், தஞ்சாவூர், திருவாரூர் ,நாகப்பட்டினம், ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என கணித்துள்ளது

மேற்கண்ட 17 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஜர் தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு தண்டனை கொடுப்போம்! - ஹிஸ்புல்லா தலைவர் சபதம்!

2 சிறுவர்கள் கொடூர கொலை.. நரபலி கொடுக்க முயற்சியா? - குடியாத்தம் அருகே அதிர்ச்சி சம்பவம்!

இலங்கையில் நாளை அதிபர் தேர்தல்: மும்முனை போட்டியில் வெற்றி பெறுவது யார்?

பராமரிப்பு பணி எதிரொலி: திருச்சி வழியாக செல்லும் ரெயில் சேவையில் மாற்றம்

இந்தியா - வங்கதேச கிரிக்கெட் தொடரை தடை செய்ய வேண்டும்: இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

அடுத்த கட்டுரையில்
Show comments