நேற்றைய மழையைக் கணிக்காதது ஏன்? வானிலை ஆய்வுமையம் பதில்!

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (11:36 IST)
சென்னையில் நேற்று திடீரென 20 செமீ அளவுக்கு மழை பெய்ததால் நகரமே ஸ்தம்பித்துப் போனது.

சென்னையில் நேற்று யாரும் எதிர்பாராத விதமாக 8 மணிநேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. நேற்று மட்டும் சுமார் 20 செமீ மழை பெய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் பல இடங்களில் வாகனங்கள் மணிக்கணக்காக காத்திருந்து ஊர்ந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

இந்நிலையில் இந்த பெருமழை பற்றி வானிலை ஆய்வுமையம் முன்கூட்டியே எச்சரிக்கை செய்யாதது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு விளக்கம் அளித்துள்ள சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் நா புவியரசன் ‘வடதமிழகம் அருகே நிலவிவந்த வளிமண்டல சுழற்சி தமிழக கடற்கரையை நெருங்கும் வாய்ப்பு குறைவாகவே இருந்தது. அதனால் தான் 31 ஆம் தேதி அதிகாலை லேசான் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்திலேயே வானிலையில் மாற்றம் ஏற்பட்டு சென்னையில் மழை கொட்டி தீர்த்தது. இந்த மழை மேகங்கள் அதிக உயரத்தில் இல்லாமல் சுமார் 3 கிமீ உயரத்திலேயே இருந்தன. இதுபோன்ற நிகழ்வுகளை முன்கூட்டியே கணிப்பது கடினம். ’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக தங்கத்தையே கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: செல்லூர் ராஜு

இருமுடி கட்டி போவாங்க! விஜய் ரசிகர் செய்த செயலால் கடுப்பான நெட்டிசன்கள்

கொல்கத்தா நிகழ்வின்போது ஏற்பட்ட குழப்பம்.. மெஸ்ஸியிடம் மம்தா பானர்ஜி வருத்தம்!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது: வீட்டின் கதவை உடைத்து கைது செய்ததாக தகவல்..!

கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸி ரசிகர்கள் ரகளை: ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments