Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரபிக்கடலில் சூறாவளி காற்று வீசும்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2024 (14:26 IST)
அரபிக் கடலில் சூறாவளி காற்று வீசும் வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 
தென்கிழக்கு அரபி கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றி உள்ளதை அடுத்து லட்சத்தீவு, அரபிக் கடலின் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என்றும் எனவே இந்த பகுதிகளுக்கு இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய மூன்று நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 
அரபிக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சில இடங்களில் காலை நேரத்தில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் மாநிலத்தின் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தூய்மைப் பணியாளர்கள் மீது அடக்குமுறை.. இதுக்கு பேர் வீரம் இல்லை! - அன்புமணி ஆவேசம்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? இறக்கமா? சென்னை விலை நிலவரம்..!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய வாய்ப்பில்லை.. இந்திய வானிலை ஆய்வு மையம்

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபாடு.. பாகிஸ்தானுக்கு டிரம்ப் பாராட்டு..!

3 மாதமாக தனியார் நிறுவனம் சம்பளம் தரலை! - கடலூர் மாநகராட்சியை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments