Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயல்பை விட வெயில் அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

Mahendran
புதன், 20 மார்ச் 2024 (15:58 IST)
கோடை காலம் தொடங்கி கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பை விட அதிக வெப்பம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மார்ச் 20, 21 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்தாலும் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் மார்ச் 22, 23 ஆகிய தேதிகளில் லேசான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது

மேலும் இன்றும் நாளையும் தமிழகத்தில் அதிகபட்ச வெப்ப நிலையாக 39 டிகிரி வரை பதிவாகும் என்றும் இயல்பை விட இரண்டு அல்லது மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது

சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னையில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் இருக்க கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இயல்பை விட அதிகமாக வெப்பம் இருக்கும் என்பதால் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் 11 மணி முதல் 3 மணி வரை அத்தியாவசிய தேவை இருந்தால் தவிர வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை இல்லையா? கெஞ்சுவதுதான் அரசின் வேலையா? - அன்புமணி கேள்வி!

எடப்பாடி பழனிசாமி எதிரான வழக்கை விசாரிக்கலாம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

அரசியல்வாதியா இருந்தாலும் தப்பு தப்புதான்! பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சீமான் ஆதரவு!

என்னை ஹோட்டலுக்கு வர சொன்னார் ஒரு இளம் அரசியல்வாதி: பிரபல நடிகை திடுக் புகார்..!

பள்ளி வளாகத்தில் வெடித்த சக்திவாய்ந்த வெடிபொருட்கள்.. ஒரு மாணவன் உள்பட 2 பேர் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments