Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2023 (13:28 IST)
அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வருகிறது என்பதும் கோடை காலத்துக்கு முன்பே வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
மேலும் தமிழகத்தில் தற்போது வறண்ட வானிலை நிலவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னையை பொருத்தவரை மழை இருக்க வாய்ப்பு இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் சில இடங்களில் மேகமூட்டம் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments