Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் சிலமணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (08:35 IST)
தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து தற்போது தமிழகம் மற்றும் ஆந்திரா இடையே கரையை கடக்க உள்ளதாக கூறப்படுகிறது. 
 
இதன் காரணமாக ஏற்கனவே வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
திருவள்ளூர் காஞ்சிபுரம் ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் கன மழை பெய்யும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் கனமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது .
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments