Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2023 (14:52 IST)
தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
 
 மழைக்காலம் குளிர் காலம் முடிவடைந்து கோடைகாலம் தொடங்க இருப்பதை அடுத்து தற்போது பல பகுதிகளில் அதிக வெயில் அடித்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கலந்து சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வருகிறது என்றும் வரும் நாட்களில் இன்னும் அதிக வெப்பம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. 
 
அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி முதல் மூன்று டிகிரி வரை அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த ஆண்டு கோடை வெப்பத்தை  நினைத்து பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments