Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மேயர் ப்ரியா போலீசில் புகார்: போலீசார் விசாரணை!

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (17:09 IST)
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா போலீசில் புகார் அளித்துள்ளதை அடுத்து போலீசார் இந்த புகார் குறித்து விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் வெற்றி பெற்ற சென்னை மேயராக பொறுப்பை ஏற்றவர் பிரியா என்பதும் அவர் சென்னை நகரின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடதக்கது. 
 
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா படத்தை வாட்ஸ்அப்பில் டிபியாக வைத்து நூதன மோசடி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து 3 பேரிடம் பணம் பறிக்க முயற்சி செய்ததாகவும் சென்னை மேயர் தரப்புக்கு தகவல் வெளியானது. 
 
இதுகுறித்து சென்னை மேயர் பிரியா சென்னை சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ள நிலையில் அந்த புகார் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments