சென்னை மெரினா - பெசண்ட் நகர் இடையே ரோப்கார்: தொடங்கியது ஆய்வுப்பணி!

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (11:30 IST)
சென்னை மெரினாவில் இருந்து பெசன்ட் நகர் கடற்கரை வரை ரோப்கார் அமைக்க ஆய்வு பணிகள் தொடங்கி உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் இடையே 4.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோப்கார் சேவை அமைக்க வேண்டும் என சென்னை மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
இது குறித்து பல ஆய்வுகள் நடைபெற்றாலும் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் இடையே அமைக்கும் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகளை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தொடங்கியுள்ளது
 
இந்த ஆய்வு பணிக்கு பின் சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் இடையே ரோப்கார் அமைக்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தி தான் பிரதமர் மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய பலம்.. பிஆர்எஸ் கட்சி விமர்சனம்..!

டிக்கெட் கவுன்ட்டர்களில் தட்கல் முன்பதிவு செய்தாலும் ஓடிபி கட்டாயம்: புதிய நடைமுறை அறிமுகம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: 13 இந்து அமைப்பினர் கைது

முற்றிலும் வலு குறைந்தது டிட்வா புயல்.. சென்னையில் இன்று வெயில் அடித்ததால் மக்கள் மகிழ்ச்சி..!

3 நாள் சரிவுக்கு பின் இன்று பங்குச்சந்தை உயர்வு.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments