சென்னை - மதுரை தேஜஸ் ரயில் இனி இந்த ஊரிலும் நிற்கும்: தென்னக ரயில்வே அறிவிப்பு

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2023 (13:42 IST)
சென்னை மதுரை தேஜஸ் ரயில்  திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் மட்டுமே நிற்கும் நிலையில் தற்போது கூடுதலாக தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது 
 
சென்னை மதுரை இடையில் ஆன  சூப்பர் பாஸ்ட் தேஜஸ் ரயில் தினமும் சென்னை எழும்பூரில் இருந்து காலை 6:00 மணிக்கு கிளம்புகிறது. இந்த ரயில்  மதுரைக்கு 6:15 மணி நேரத்தில் அதாவது 12.15க்கு மதுரை சென்று விடும் 
 
இந்த ரயில் திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் மட்டுமே இதுவரை நின்று சென்ற தேஜஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்க வேண்டும் என பல மாதங்களாக பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ரயில்வே துறை இனி தாம்பரத்திலும் தேஜஸ் ரயில் நிற்கும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்து ட்ரம்புக்கு நோபல் பரிசு இல்லையா? வெள்ளை மாளிகை கண்டனம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்.. பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம்.!

நோபல் கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சியில் ட்ரம்ப்! வெனிசுலாதான் காரணமா?

20 லட்சம் கடன் தருவதாக கூறி லட்சக்கணக்கில் ஏமாந்த நபர்.. மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?

குறைவது போல குறைந்து மீண்டும் உயர்ந்த தங்கம்! தற்போதைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments