Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை - மதுரை தேஜஸ் ரயில் இனி இந்த ஊரிலும் நிற்கும்: தென்னக ரயில்வே அறிவிப்பு

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2023 (13:42 IST)
சென்னை மதுரை தேஜஸ் ரயில்  திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் மட்டுமே நிற்கும் நிலையில் தற்போது கூடுதலாக தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது 
 
சென்னை மதுரை இடையில் ஆன  சூப்பர் பாஸ்ட் தேஜஸ் ரயில் தினமும் சென்னை எழும்பூரில் இருந்து காலை 6:00 மணிக்கு கிளம்புகிறது. இந்த ரயில்  மதுரைக்கு 6:15 மணி நேரத்தில் அதாவது 12.15க்கு மதுரை சென்று விடும் 
 
இந்த ரயில் திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் மட்டுமே இதுவரை நின்று சென்ற தேஜஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்க வேண்டும் என பல மாதங்களாக பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ரயில்வே துறை இனி தாம்பரத்திலும் தேஜஸ் ரயில் நிற்கும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments