சென்னை புறநகர் ரயில்களின் புதிய அட்டவணை: 54 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல்..!

Webdunia
சனி, 15 ஜூலை 2023 (10:17 IST)
சென்னை புறநகர் ரயில்வே புதிய அட்டவணை வெளியாகி உள்ள நிலையில் அதில் 54 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை மின்சார ரயில்களின் கால அட்டவணை ஒவ்வொரு ஆண்டும்  மாற்றி அமைக்கப்படும் நிலையில் இந்த ஆண்டுக்கான புதிய ரயில்வே அட்டவணை தற்போது வெளியாகியுள்ளன. 
 
இந்த அட்டவணையின்படி சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் 16 ரயில்களும் தாம்பரம் - வேளச்சேரி வழித்தடத்தில் 19 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
பேருந்து கட்டண உயர்வுக்கு பின்னர் ரயில்களையே பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் ரயில்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளது அநீதியானது என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
எனவே பொதுமக்களின் வசதியை கணக்கில் கொண்டு ரத்து செய்யப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் விளக்கமளித்தபோது, ‘பராமரிப்பு காரணமாக ரயில்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூட்ட நெரிசல் இல்லாத மற்றும் இரவு நேரத்தில் உள்ள ரயில்கள் மட்டும்தான் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments