Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் லலிதா ஜுவல்லரியில் கைவரிசை; 5 கிலோ தங்க நகைகளுடன் ஊழியர் எஸ்கேப்!

Webdunia
புதன், 27 ஜனவரி 2021 (11:01 IST)
சென்னையில் பிரபல நகைக்கடையான லலிதா ஜுவல்லரியிலிருந்து ஊழியர் ஒருவர் 5 கிலோ தங்கத்தை திருடிக் கொண்டு தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நகைக்கடையான லலிதா ஜுவல்லர்ஸ் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்கள், முக்கிய நகரங்களில் நகைக்கடைகள் வைத்துள்ளது. இதில் சென்னை லலிதா ஜுவல்லர்ஸ் கடையில் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தவர் பிரவீன்குமார் சிங். சமீபத்தில் தங்க நகைகளை எடைபோடும் பணியின்போது 5 கிலோ தங்கம் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பிரவீன்குமார் சிங் பாலிஷ் செய்த நகைகளை திருடியது சிசிடிவி கேமரா மூலம் தெரிய வந்துள்ளது. தப்பியோடிய பிரவீன்குமார் சிங் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்பதால் அவரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸார் ராஜஸ்தான் விரைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையர்கள் கைவரிசை நடத்திய நிலையில், தற்போது ஊழியரே திருடியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments