Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் லலிதா ஜுவல்லரியில் கைவரிசை; 5 கிலோ தங்க நகைகளுடன் ஊழியர் எஸ்கேப்!

Webdunia
புதன், 27 ஜனவரி 2021 (11:01 IST)
சென்னையில் பிரபல நகைக்கடையான லலிதா ஜுவல்லரியிலிருந்து ஊழியர் ஒருவர் 5 கிலோ தங்கத்தை திருடிக் கொண்டு தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நகைக்கடையான லலிதா ஜுவல்லர்ஸ் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்கள், முக்கிய நகரங்களில் நகைக்கடைகள் வைத்துள்ளது. இதில் சென்னை லலிதா ஜுவல்லர்ஸ் கடையில் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தவர் பிரவீன்குமார் சிங். சமீபத்தில் தங்க நகைகளை எடைபோடும் பணியின்போது 5 கிலோ தங்கம் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பிரவீன்குமார் சிங் பாலிஷ் செய்த நகைகளை திருடியது சிசிடிவி கேமரா மூலம் தெரிய வந்துள்ளது. தப்பியோடிய பிரவீன்குமார் சிங் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்பதால் அவரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸார் ராஜஸ்தான் விரைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையர்கள் கைவரிசை நடத்திய நிலையில், தற்போது ஊழியரே திருடியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments