Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் லலிதா ஜுவல்லரியில் கைவரிசை; 5 கிலோ தங்க நகைகளுடன் ஊழியர் எஸ்கேப்!

Webdunia
புதன், 27 ஜனவரி 2021 (11:01 IST)
சென்னையில் பிரபல நகைக்கடையான லலிதா ஜுவல்லரியிலிருந்து ஊழியர் ஒருவர் 5 கிலோ தங்கத்தை திருடிக் கொண்டு தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நகைக்கடையான லலிதா ஜுவல்லர்ஸ் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்கள், முக்கிய நகரங்களில் நகைக்கடைகள் வைத்துள்ளது. இதில் சென்னை லலிதா ஜுவல்லர்ஸ் கடையில் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தவர் பிரவீன்குமார் சிங். சமீபத்தில் தங்க நகைகளை எடைபோடும் பணியின்போது 5 கிலோ தங்கம் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பிரவீன்குமார் சிங் பாலிஷ் செய்த நகைகளை திருடியது சிசிடிவி கேமரா மூலம் தெரிய வந்துள்ளது. தப்பியோடிய பிரவீன்குமார் சிங் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்பதால் அவரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸார் ராஜஸ்தான் விரைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையர்கள் கைவரிசை நடத்திய நிலையில், தற்போது ஊழியரே திருடியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

தொகுதி மறுசீரமைப்பு அடுத்த கூட்டம் எங்கே? எப்போது? முக்கிய தகவல்..!

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments