துபாய் புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! – சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2022 (09:07 IST)
சென்னையிலிருந்து துபாய் புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலிருந்து துபாய்க்கு இண்டிகோ விமானம் ஒன்று 160 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை 7.40 மணியளவில் புறப்பட இருந்தது.

இந்நிலையில் துபாய் செல்லும் இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக விமான கட்டுப்பாட்டு மையத்திற்கு போன் வந்துள்ளது. இதையடுத்து உடனடியாக விமானத்திலிருந்து பயணிகளை வெளியேற்றிய பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேசமயம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரையும் ட்ரேஸ் செய்துள்ளனர். அதில் வெகுண்டு மிரட்டல் விடுத்தவரின் குடும்பமும் அந்த விமானத்தில் பயணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்து ட்ரம்புக்கு நோபல் பரிசு இல்லையா? வெள்ளை மாளிகை கண்டனம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்.. பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம்.!

நோபல் கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சியில் ட்ரம்ப்! வெனிசுலாதான் காரணமா?

20 லட்சம் கடன் தருவதாக கூறி லட்சக்கணக்கில் ஏமாந்த நபர்.. மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?

குறைவது போல குறைந்து மீண்டும் உயர்ந்த தங்கம்! தற்போதைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments