Webdunia - Bharat's app for daily news and videos

Install App

102 + 20: அதிமுகவை எதிர்த்து திமுக கண்டன போராட்டம்!

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (16:32 IST)
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக அரசின் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்னெடுத்து வைத்து கண்டன கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. 
 
இன்றும், நாளையும் இந்த கண்டன் கூட்டம் சுமார் 127 இடங்களில் நடைபெறுவதாக இருந்த நிலையில், இதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. எனவே, திமுக சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது. 
 
உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இதற்கான விசாரணை நீதிபதி, மகாதேவன் முன்பு நடைபெற்றது. அரசு தரப்பில், சட்டம் ஒழுங்கு பாதிப்பு இருப்பதால்தான் கண்டன கூட்டத்திற்கு அனுமதி தரவில்லை என வாதம் முன்வைக்கப்பட்டது. 
 
ஆனால், திமுக தரப்பு, ஏற்கனவே பிற கட்சியினருக்கு நாங்கள் கேட்ட இடங்களில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது ஏன் என கேட்கப்பட்டது. 
 
இதன் பின்னர், 127 இடங்களில் 102 இடங்களுக்கு அனுமதியளிக்கபப்ட்டுள்ளது. மேலும், 5 இடங்களின் கண்டன் கூட்டம் நடத்த மறுக்கப்பட்டும், மீதமுள்ள 20 இடங்களுக்கு பதில் வேறு இடங்களை பரித்துரைக்க கோரியும் குறிப்பிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments