Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகார வரம்பை மீறி உத்தரவு: பட்டியலின ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட் கண்டனம்

Webdunia
வியாழன், 2 பிப்ரவரி 2023 (13:28 IST)
கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்த பட்டியலின ஆணையம் பிறப்பித்த உத்தரவு அந்த ஆணையத்தின் அதிகார வரம்பை மீறி உள்ளதாகவும் இவ்வாறு ஒரு உத்தரவு எப்படி பிறப்பித்தது என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கூடாது என கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேசிய பட்டியலின ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. 
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது தேசிய பட்டியலின ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பட்டியலின ஆணையம் அதிகார வரம்பை மீறி எப்படி இந்த உத்தரவை பிறப்பித்தது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments