Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் துரைமுருகன் மகன் மீதான வழக்கு: ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு..!

Webdunia
புதன், 12 ஜூலை 2023 (07:43 IST)
தமிழக அமைச்சர் துரைமுருகன் மகனும் மக்களவை எம்பி விமான கதிர் ஆனந்த் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடிய மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 
 
தமிழக அமைச்சரும் திமுகவின் மூத்த தலைவருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம் பி ஆக உள்ளார் என்பதும் அவர் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் திமுக எம்பி கதிர் ஆனந்த் வருமானவரி கணக்கை தாமதமாக தாக்கல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கதிர் ஆனந்த் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
 
திமுக எம்பி கதிர் ஆனந்த் மீதான வருமான வரி வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதோடு அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த மனு இன்னும் ஒரு சில நாட்களில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments