Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேட்பாளர்களுக்கு கொரோனா சோதனை செய்ய மனு! – நீதிமன்றம் அளித்த நூதன தண்டனை!

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (12:56 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வேட்பாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்துவதற்கு உத்தரவிட மறுப்பு தெரிவித்ததுடன், வழக்கு தொடர்ந்தவர் இனி ஒரு ஆண்டு காலத்திற்கு வேறு எந்த பொது நல வழக்கு தொடரவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments