Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

Webdunia
செவ்வாய், 23 ஜூன் 2020 (10:58 IST)
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வன் கொடுமை தடுப்புச் சட்டம் வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செய்த மனுவையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
பட்டியலின மக்கள் குறித்து அவதூறுஜ் கருத்து தெரிவித்ததாக ஆர்எஸ் பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த 23ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் ஆர்.எஸ்.பாரதிக்கு ஜூன் ஒன்றாம் தேதி அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது 
 
இந்த நிலையில் அமர்வு நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான தீர்ப்பு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது
 
இந்த தீர்ப்பில் வன்கொடுமை தடுப்பு சட்டம் வழக்கில் ஆர்.எஸ்.பாரதி ஜாமீனை ரத்து செய்ய கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா!? இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு!

பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.. இம்ரான்கான் அதிரடி..!

கேரளாவுக்கும் பரவியதா கொரோனா வைரஸ்? 68 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments