Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக உள்கட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு! – தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

Tamilnadu
Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (11:26 IST)
அதிமுகவில் நடந்து முடிந்த உள்கட்சி தேர்தலை எதிர்த்து அதிமுக தொண்டர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் நடந்த நிலையில் அதிமுகவின் கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்த உள்கட்சி தேர்தல் அதிமுக கட்சி விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்படவில்லை என்று தடை கோரி அதிமுக உறுப்பினர் ஜெயச்சந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தின் பெயர் தேவையின்றி சேர்க்கப்பட்டிருந்ததால் முதலில் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இன்று நடைபெற்ற விசாரணையில் வழக்கு தொடர எந்த முகாந்திரமும் இல்லை என கூறி வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?

இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறை ரூ.78,000 கோடி பிசினஸ் பெறும்.. சர்வே தகவல்..!

அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: டாஸ்மாக் மனுதாக்கல்..!

4 நாட்கள் அடைத்து வைத்து 7 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை.. 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

ரூ.38 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய இளம்பெண்.. பெங்களூரு விமான நிலையத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments