Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மருத்துவமனை டீனுக்கு கொரோனா! – பொறுப்பை ஏற்கும் மருத்துவ கல்வி இயக்குனர்!

Webdunia
ஞாயிறு, 14 ஜூன் 2020 (08:55 IST)
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை டீனுக்கு கொரோனா தொற்று உள்ளதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. முக்கியமாக சென்னையில் கொரோனா பாதிப்புகள் மற்ற மாவட்டங்களை காட்டிலும் அதிகமாக உள்ளது. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை உள்ளிட்டவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பணி புரியும் செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் உட்பட இதுவரை 65 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் டீன் ஜெயந்தி மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். இதனால் அவருக்கு கொரோனா பாதிப்புகள் இருக்கலாம் என பேசிக்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் அவர் விட்டு சென்ற பொறுப்பை மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபுவே நேரடியாக ஏற்க உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments