Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நடக்க இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் கால வரையின்றி ஒத்திவைப்பு..!

Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2023 (11:34 IST)
சென்னையில் நடக்க இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் கால வரையின்றி ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னையில் டிசம்பர் 15, 16 தேதிகளில்  ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டு சென்னை தீவுத்திடல் அருகே தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், எந்த தேதியும் குறிப்பிடாமல்  ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஏற்கனவே சென்னை கார் பந்தயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார். அவர், ‘கார் பந்தயம் நடத்த ரூ.240 கோடி   திமுக அரசு செலவிடுவது ஏன்?  ஒரு நாள் மழைக்கே சென்னை மாநகரம் தத்தளிக்கிறது. மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. பல்வேறு திட்டங்களுக்கு நிதியில்லாமல் இருக்கும் நிலையில், பந்தயத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்து இருந்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் நாள் பள்ளிக்கு சென்று வந்தவுடன் பிளஸ் 2 மாணவி தற்கொலை.. காதல் விவகாரமா?

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments