Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவு திருவிழாவில் பீப் பிரியாணி! – இன்று முதல் தொடக்கம்!

Webdunia
சனி, 13 ஆகஸ்ட் 2022 (10:47 IST)
சென்னை உணவு திருவிழாவில் பீப் பிரியாணி இல்லாதது குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் இன்று முதல் பீப் பிரியாணி இடம்பெறுவதாக செய்தி வெளியாகியுள்ளது.

சென்னை தீவுத் திடலில் ஆகஸ்ட் 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மூன்று நாள் உணவுத் திருவிழா நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் படி நேற்று முதல் உணவு திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை, ஈட் ரைட் இந்தியா இயக்கத்துடன் இணைந்து இவ்விழாவை நடத்துகிறது.

150 உணவு ஸ்டால்கள் அமைக்கப்பட்டு பலவகை உணவுகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பீப் பிரியாணி இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேசமயம் பீப் பிரியாணி ஸ்டால் போட யாரும் அனுமதி கோரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று முதல் உணவு திருவிழாவில் உள்ள சுக்குபாய் ஸ்டாலில் பீப் பிரியாணி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பீப் பிரியாணி குறித்த சர்ச்சை முற்றுப்பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments