Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உண்டியல் ஏந்தி நிவாரண நிதி வசூல் செய்த தெலுங்கு நடிகர் நடிகைகள்

உண்டியல் ஏந்தி நிவாரண நிதி வசூல் செய்த தெலுங்கு நடிகர் நடிகைகள்
, ஞாயிறு, 6 டிசம்பர் 2015 (20:24 IST)
நான் ஈ படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் நானி உள்பட பல தெலுங்கு நடிகர், நடிகைகள் 10 பேர் ஹைதராபாத்தில் உள்ள பிரபலமான வணிக வளாகங்களில் இன்று மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை தமிழ்நாட்டின் வெள்ள நிவாரணதிற்கு உண்டியல் ஏந்தி நிதி வசூல் செய்து உள்ளனர்.


 
 
தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் சென்னை மக்களுக்காக ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கி இருக்கிறார். நடிகர் பிரபாஸ் ரூ.15 லட்சமும், மகேஷ்பாபு ரூ.10 லட்சமும், ரவிதேஜா ரூ.5 லட்சமும், கல்யாண் ராம் ரூ.5 லட்சமும், சாய்தரம் தேஜா ரூ.3 லட்சமும், வருண் தேஜா ரூ.3 லட்சமும் நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர். இதுவரை தெலுங்கு நடிகர்கள் 66 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை நிவாரண நிதியைத் திரட்டியுள்ளனர். இதை தமிழக முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளனர்
 
நான் ஈ படத்தில் கதாநாயகனாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் நானி உள்பட பல தெலுங்கு நடிகர், நடிகைகள் 10 பேர் ஹைதராபாத்தில் உள்ள வணிக வளாகங்களில் இன்று மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை தமிழ்நாட்டின் வெள்ள நிவாரணதிற்கு உண்டியல் ஏந்தி நிதி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil