Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை விமான நிலையத்தின் ஓடுதளத்தை சூழ்ந்த வெள்ள நீர்… விமானங்கள் ரத்து!

Webdunia
திங்கள், 4 டிசம்பர் 2023 (09:30 IST)
வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக நேற்றிரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் தொடர்ந்து பெருமழை பெய்து வருகிறது. இன்று சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பல இடங்களில் போக்குவர்த்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தின் ஓடுதளத்தில் மழை நீர் வெள்ளமாக ஓடுவதால் புறப்பட இருந்த மற்றும் தரையிறங்க இருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னைக்கு வரவேண்டிய விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிக அவசியமாக இருந்தால் மட்டுமே விமான பயணம் மேற்கொள்ளுமாறும், அவசியம் இல்லாவிட்டால் பயணத்தை ரத்து செய்யவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக கவுன்சிலரின் கன்னத்தில் அறைந்த திமுக பெண் கவுன்சிலர்.. சேலம் மாநகராட்சியில் பரபரப்பு..!

பாமகவை இரண்டாக உடைத்தது பாஜக தான்.. இன்னும் சில கட்சிகள் உடையும்: பத்திரிகையாளர் மணி

ப்ரமோஸ் ஏவுகணையை வெச்சு பொளந்துட்டாங்க! அடிவாங்கியதை ஒருவழியாக ஒத்துக் கொண்ட பாக். பிரதமர்!

பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை எப்படியாவது மீட்டுவிடுங்கள்: ராணுவ தலைவருக்கு ஆன்மீக ஆசான் கோரிக்கை..!

இன்று 11 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments