சென்னையில் பனிமூட்டம்.. பெங்களூருக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்!

Webdunia
புதன், 28 டிசம்பர் 2022 (09:43 IST)
சென்னையில் கடந்த சில நாட்களாக பனிமூட்டம் இருந்து வரும் நிலையில் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் அதிக பனிமூட்டம் இருந்ததால் சென்னைக்கு வந்த விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கடந்த சில நாட்களாக சென்னையில் பனி மூட்டம் அதிகமாகி வருவதை அடுத்து ஒரு சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் சில விமானங்கள் தாமதமாக கிளம்பியதாகவும் தகவல்கள் வெளியாகின 
 
இந்த நிலையில் சென்னை விமான நிலைய பகுதியில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் விமானங்கள் தரையிறங்க முடியாமல் திரும்பி சென்றதாகவும் சில விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
 கத்தாரில் இருந்து இன்று காலை சென்னை வந்த விமானம் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது என்றும், கோவை பெங்களூர் ஆகிய பகுதியில் இருந்து வந்த விமானங்கள் மீண்டும் அந்தந்த ஊர்களுக்கு திரும்பி சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உ.பி. முதல்வர் யோகி குறித்து சர்ச்சைப் பேச்சு: அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்!

மோந்தா புயல்: சென்னை உள்பட 17 மாவட்டங்களில் இன்று இரவுக்கான மழை எச்சரிக்கை..!

தமிழ்நாட்டில் தற்போதைய வாக்காளர் பட்டியல் Freeze செய்யப்படும்: தேர்தல் ஆணையம்..!

'மோந்தா' புயல் கரையை கடக்கும்போது 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.. வானிலை எச்சரிக்கை..

தேர்தல் ஆணையத்தின் ’SIR’ தொடங்க சில நாட்கள்.. திடீரென 47 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிய மம்தா பானர்ஜி..!

அடுத்த கட்டுரையில்
Show comments