Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மின்சார ரயில் போக்குவரத்து தொடங்குவது எப்போது?

Webdunia
வியாழன், 26 நவம்பர் 2020 (15:32 IST)
நிவர் புயல் காரணமாக நேற்று முன்தினம் மதியம் ஒரு மணியிலிருந்து மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மீண்டும் மின்சார ரயில்கள் இயங்கும் நேரம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
 
நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை நிவர் புயல் கரையை கடந்த நிலையில் தற்போது நிவாரண பணிகளை முடுக்கி விடும் பணியில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் ஒரு மணிக்கு நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள் மீண்டும் எப்போது இயங்கும் என்று பயணிகள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் இது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று பிற்பகல் 3 மணி முதல் புறநகர் சிறப்பு ரயில்கள் சேவை துவங்குகிறது என தென்னிந்திய ரயில்வே அறிவித்துள்ளது. முதல்கட்டமாக சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் இரு மார்க்கங்களிலும் புறநார் ரயில் சேவை துவங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதன் காரணமாக மின்சார ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே சென்னையில் மெட்ரோ ரயில்கள் ஓடத் தொடங்கி விட்டன என்பதும் ஒரு சில பகுதிகளில் பேருந்துகளும் இயங்கி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே நிவர் புயல் பாதிப்பை மீறி கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு சென்னை திரும்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments