Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்க பணி: அவசர வழக்காக விசாரிக்க அனுமதி..!

Webdunia
திங்கள், 12 ஜூன் 2023 (11:52 IST)
சென்னை எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்க பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை நவீன முறையில் விரிவுபடுத்த கடந்த சில மாதங்களாக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளின் போது மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பசுமைத்தாயகம் என்ற அமைப்பு முறையீடு செய்துள்ளது 
 
மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபூர்வாலாஅடங்கிய அமர்வு அவசர வழக்காக விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. 
 
மரங்கள் வெட்டப்படுவதை கைவிட கோரி மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பசுமைத்தாயகம் அமைப்பு குற்றம் சாட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments