Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 1,243 பதற்றமான சாவடிகள்; 18 ஆயிரம் போலீஸார்! – காவல் ஆணையர் தகவல்!

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (08:55 IST)
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சென்னையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதட்டமான வாக்குசாவடிகள் உள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகின்றன. வாக்கு எண்ணும் பணிகள் பிப்ரவரி 22ம் தேதி நடைபெற உள்ளன.

இந்நிலையில் சென்னையில் தேர்தல் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வரும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் பேசும்போது, சென்னையில் 1,243 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக உள்ளதாக தெரிவித்துள்ளார். தேர்தல் பணிகளில் 27 ஆயிரம் பணியாளர் பணியாற்ற உள்ளதாகவும், தேர்தல் நாளன்று 18 ஆயிரம் போலீஸார் காவல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை மாநகராட்சி பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் கூட்டமாக சென்று வாக்கு சேகரிக்க கூடாது என்றும், பதற்றமான வாக்குசாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments