Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கால் குறைந்த பயணிகள் – சென்னையில் 126 விமானங்கள் ரத்து!

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (12:02 IST)
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் உள்நாட்டு விமான சேவை அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் சென்னையில் விமானங்கள் ரத்தாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக 2 வாரங்களுக்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து சர்வதேச விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் உள்நாட்டு விமான சேவைகள் மட்டும் அவசர தேவை கருதி அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனினும் பல மாநிலங்களிலும் ஊரடங்கு இருப்பதால் பலர் பயணங்களை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. இன்று சென்னைக்கு சில விமான சேவைகள் நடந்தாலும், மிகவும் குறைவான பயணிகள் கொண்ட விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி இன்று மட்டும் சென்னையிலிருந்து புறப்பட இருந்த மற்றும் சென்னைக்கு வரவிருந்த 126 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments