Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கொரோனா பாதித்த பகுதிகள் எது? – பட்டியல் வெளியிட்டது சென்னை மாநகராட்சி!

Webdunia
திங்கள், 30 மார்ச் 2020 (09:13 IST)
தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ள நிலையில் சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 15 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னையில் எந்தெந்த பகுதிகளில் உள்ளவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரங்களை சென்னை மாநகராட்சி பட்டியலாக வெளியிட்டுள்ளது.

அதன்படி, அரும்பாக்கம் மற்றும் புரசைவாக்கம் பகுதிகளில் 5 பேருக்கும், கோடம்பாக்கம் பகுதிகளில் 5 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் போரூரில் 2 பேருக்கும், சாந்தோம், ஆலந்தூர், கோட்டூர்புரம் பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக அந்த பட்டியலில் வெளியாகியுள்ளது.

சென்னையில் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த தன்னார்வலர்களுடன் மாநகராட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments