Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கொரோனா பாதித்த பகுதிகள் எது? – பட்டியல் வெளியிட்டது சென்னை மாநகராட்சி!

Webdunia
திங்கள், 30 மார்ச் 2020 (09:13 IST)
தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ள நிலையில் சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 15 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னையில் எந்தெந்த பகுதிகளில் உள்ளவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரங்களை சென்னை மாநகராட்சி பட்டியலாக வெளியிட்டுள்ளது.

அதன்படி, அரும்பாக்கம் மற்றும் புரசைவாக்கம் பகுதிகளில் 5 பேருக்கும், கோடம்பாக்கம் பகுதிகளில் 5 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் போரூரில் 2 பேருக்கும், சாந்தோம், ஆலந்தூர், கோட்டூர்புரம் பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக அந்த பட்டியலில் வெளியாகியுள்ளது.

சென்னையில் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த தன்னார்வலர்களுடன் மாநகராட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments