Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மழையை எதிர் கொள்ள தயாரான சென்னை: உதவி எண் அறிவிப்பு

மழையை எதிர் கொள்ள தயாரான சென்னை: உதவி எண் அறிவிப்பு
, புதன், 30 நவம்பர் 2016 (19:47 IST)
நாடா என்ற புயல் உருவாகியுள்ளதால் சென்னையில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, அவசர உதவிக்கான எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.


 

 
நாடா என்ற புயல் உருவாகியுள்ளதால் சென்னையில் கனம்ழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதோடு 5 மாவட்டங்களுக்கு இரண்டு நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் சென்னை மாநகராட்சி மழையை எதிர்க்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளது. அதோடு அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. இதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு பிரிவு 24 மணி நேரமும் செயல்படும். மேலும் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மரங்கள் விழுந்தாலோ, சாலை விபத்துக்கள் நடந்தாலோ உடனடியாக இந்த எண்களுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
 
1077, 1913 என்ற உதவி எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவி திட்டமிட்டு நாடகம் - கணவனை தீர்த்துக்கட்டிய காதலன்