Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிட்டிங்ல 20 பேர்; ஸ்டாண்டிங்ல 5 பேர்: பேருந்துகளில் புதிய விதிமுறைகள்!

Webdunia
திங்கள், 11 மே 2020 (13:31 IST)
ஊரடங்கு முடிய உள்ள நிலையில் சென்னையில் குறைந்த அளவிலான பயணிகளை கொண்டு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கு நடவடிக்கை மே 17 உடன் நிறைவடைய இருக்கிறது. ஊரடங்கிறகு பிறகு போக்குவரத்துகளை இயக்குவது குறித்து போக்குவரத்துத்துறை பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி சென்னை உள்ளூர் போக்குவரத்து பேருந்துகளில் 20 பேர் அமர்ந்து செல்லவும், 5 பேர் நின்று செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு பேருந்தில் அதிகபட்சமாக 25 பேர் மட்டுமே செல்ல முடியும். இதுதவிர பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிதல் போன்ற விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இதுத்தவிர சென்னை மின்சார ரயில்களிலும் பெட்டிக்கு 50 நபர்களை அனுமதிக்கவும், மெட்ரோ ரயில்களில் 160 பேர் வரை அனுமதிக்கவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments