Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரிகளில் அதிகரிக்கும் கொரோனா! – காய்ச்சல் முகாம்கள் அமைக்க திட்டம்!

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2020 (09:43 IST)
சென்னை ஐஐடி மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் சென்னை முழுவதும் கல்லூரிகளில் காய்ச்சல் முகாம்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை ஐஐடியில் விடுதியில் இருந்த மாணவர்கள் உட்பட 100 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் சென்னை முழுவதும் உள்ள கல்லூரி விடுதிகளில் உள்ள மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கல்லூரி விடுதிகளில் காய்ச்சல் முகாம்கள் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. இதனால் கொரோனா அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறியவும், பாதிப்பை குறைக்கவும் முடியும் என நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments